×

அடிக்கல் நாயகன் பழனிசாமி, தமிழகத்தை கொண்டு டெல்லியில் அடகு வைத்து விட்டார் : கனிமொழி எம்.பி. கடும் தாக்கு!!

சென்னை : சென்னை மயிலாப்பூர் கபாலி தோட்டத்தில், திமுக வேட்பாளரை ஆதரித்து, திமுக கனிமொழி எம்.பி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது :-உங்களுடைய மயிலாப்பூர் வேட்பாளர் திமுக எளிமையானவர். அடித்தட்டு மக்களின் வலிகளை புரிந்து கொள்ளகூடியவர். திமுக ஆட்சி வரப்போகிறது.மு.க.ஸ்டாலின் முதல்வராக வரப்போகிறார். இந்த ஆட்சியில், தமிழகம் முழுவதும் சாலை ஏதும் போடப்படவில்லை.எட்டு வழிச்சாலை மட்டும் முதல்வர் பழனிசாமி போடுவார்.அதில் தான் கொள்ளையடிக்க முடியும் என்று கனிமொழி பேசினார்.

அப்போது அங்கு திரண்டிருந்த திமுகவினர்.டெண்டர் பழனிச்சாமி  என்று தெரிவித்தனர். அதற்கு கனிமொழி, டெண்டர் பழனிச்சாமி இல்லை,அடிக்கல் நாயகன் பழனிச்சாமி என்று தெரிவித்தார்.மேலும் கனிமொழி பேசியதாவது, அடிக்கல் மட்டும் நாட்டுகிறார். ஆனால் எந்த திட்டத்தையும் செயல்படுத்துவதில்லை‌. தமிழகத்தை கொண்டு டெல்லியில் அடகு வைத்து விட்டனர்.இந்தி, சமஸ்கிருத்தை திணிக்கிறார்கள்.அதிமுக ஆட்சியில் இருந்தால் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இருக்காது.பெட்ரோல் - டீசல் விலை, சிலிண்டர் விலை நாளுக்கு நாள் விலையேறி கொண்டு இருக்கிறது.அதிமுக தேர்தல் அறிக்கையில் முந்தைய முறை அளித்த வாக்குறுதியை கூட நிறைவேற்ற வில்லை.

சென்னையில் சிதைந்து போன குடிசைமாற்று வாரிய குடியிருப்பு புதுப்பித்து தரப்படும்.உடற்பயிற்சி கூடம், நூலகம், விளையாட்டு மைதானம், பூங்கா, ஆரம்ப சுகாதார மருத்துவமனை அமைக்கப்படும். எடப்பாடி.கே.பழனிச்சாமி ஆட்சியில்உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் எல்லாம் தாக்கப்படுகிறார்கள். சிலிண்டர், வாஷிங் மிஷன்வரும் என்று சொல்லுவார்கள் ஆனால் வராது.  ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று தெரிந்து இப்படிப்பட்ட வாக்குறுதிகளை சொல்கிறார், இவ்வாறு அவர் பேசினார்

Tags : Palanisami ,T.N. RB , கனிமொழி
× RELATED எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி...